Saturday, 28 June 2014

மனிதனுக்கு எதிரிகள் எத்தனை பேர் ?

              மனிதனின் எதிரிகள் எத்தனை பேர் ?



   மனிதனுக்கு எதிரிகள் எத்தனை பேர் ?


மனிதனுக்கு எதிரிகள் ஆறுபேர். அவர்கள் வேறெங்கும் இல்லை. அவனுக்குள்ளே தான்  இருக்கிறார்கள். -  - என்படி கடோபநிஷத் அந்த ஆறு  எதிரிகளைச்சுட்டிக் காட்டுகிறது  ஷட்புரி என்ற பெயரிட்டு. 
   கர்வம் என்ற மைய உருவத்தில்.அந்த ஆறு எதிரிகளின் ஓட்டம் நிகழ்ந்து வருகிறது . எப்படி? எந்தெந்த வடிவில்  வருகிறது?

(1) பிறப்பில் செல்வந்தனாக யிருப்பது.
(2) பதவியில் உயர்ந்தவனாக யிருப்பது.
(3) படிப்பில் - பாண்டித்யம் பெற்றிருப்பது.
(4) த ன்னை விட அறிவாளி யாரும் இல்லை என்ற செருக்கு.
(5) ரூப லாவண்யம் - தன் சரீர அழகில் உண்டான கர்வம்
(6) ஆன்மீகத்தில், ஒரு சிறு முன்னேற்றம் அடையும் முன்பே சாதித்து விட்டோம் என்று முன் வந்து  வந்து நிற்கும் ஆணவம்.

இந்த  ‘ஷட் புரி’ எதிரிகளை எப்படி அடக்கியாள்வது? 

கண்ணபிரான் அதற்கு ஒரு ஒரு நல்ல யுக்தியை கற்பித்திருக்கிறார். 

"ஏ! மனிதனே! நீ உன் உடலை ஒரு தேராக வைத்துக் கொள். அதில் உன் கண் - மூக்கு - வாய் - காது - மனம் உள்பட - 5 குதிரைகள். உன் மனமே அதற்கான கடிவாளம். அந்தத் தேரில் சவாரி பண்ணுகிறானே. அவனே ‘ஆன்மா’ குதிரைகள் திசைமாறிப் போக, நிறைய வாய்ப்பு இருக்கிறது. அவைகளை அடக்கி, ராஜ மார்க்கமான நல்ல திசையில் கொண்டு போவது, கடிவாளத்தைப் பிடித்திருக்கும் மனமேயாகும். அந்த மனமும் அலைபாயும் தன்மையுடையது. அதையும் திருத்தி அமைத்து, நேர் வழியில் செலுத்துவதற்கு ‘அறிவு’ வேண்டும். அந்த அறிவும் சாஸ்திர விதிகளை எடுத்துக் கொள்ளும் தன்மையும், அதையே வழிபட்டு நடைமுறைக்கும் கொண்டு வந்து நடத்திக் காட்டும், நம் முன்னோர்கள், மஹான்கள், ஆச்சார்யர்கள், சொல்லும் உபதேசத்தையும் நாம் எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். வேதத்தை எடுத்து ஓத, அந்த சிவபெருமானே - சங்கரராக அவதரித்து பல கோணங்களில் எடுத்துரைத்திருக்கிறார்.

 புலன்களை அடக்கி ஆளாதவன் கதி அதோகதிதான் என்றே சொல்லுகிறார். 

மனது என்ற தேரோட்டியே தூங்கி விட்டால் என்ன கதியாகும்

No comments:

Post a Comment